நெதர்லாந்தில் ஐரோப்பியரீதியிலான மாபெரும் திரையிசை பாடல் போட்டி

நெதர்லாந்தில் ஐரோப்பியரீதியிலான மாபெரும் திரையிசை பாடல் போட்டி

Post Footer automatically generated by wp-posturl plugin for wordpress.

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி அவுஸ்திரேலிய அணியை வென்று இறுதிக்குத் தகுதி பெற்றது இலங்கை அணி.

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் இறுதி லீக் ஆட்டத்தில் அபாரமாக விளையாடி அவுஸ்திரேலிய அணியை வென்று இறுதிக்குத் தகுதி பெற்றது இலங்கை அணி.

இலங்கை அணி தோற்றால் இந்தியா இறுதிக்குத் தகுதி பெறும் என்ற நிலையில் இன்று இலங்கை-அவுஸ்திரேலிய கடைசி லீக் போட்டி நடைபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி அணித் தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். ஆரம்ப ஆட்டக்காரர்கள் ஜயவர்தனவும் 5, டில்ஷானும் 9, ஓட்டங்களுடன் ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்தது இலங்கை அணிக்கு பின்னடைவாக இருந்தது.

ஆனால் அதன்பிறகு இணை சேர்ந்த சங்ககாராவும் சந்திமாலும் சிறப்பாக விளையாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை 140 ஓட்டங்களுக்கு உயர்த்திய நிலையில் 64 ஓட்டங்களை எடுத்திருந்த சங்ககார ஆட்டமிழந்தார்.

Post Footer automatically generated by wp-posturl plugin for wordpress.

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 52 இலங்கையர்கள் விசாரணைகளுக்குப் பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட 52 இலங்கையர்கள் விசாரணைகளுக்குப் பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

.நாடுகடத்தப்பட்ட 52 பேரில் 28 தமிழர்களும், 10 முஸ்லிம்களும், 14 சிங்களவர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இம் முஸ்லிம்கள் அக்குரனைப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகின்றது.

இவர்களில் 44 பேர் ஆண்கள் என்பதுடன், 8 பேர் பெண்கள் ஆவர்.

இவர்கள் நேற்று காலை 10.30 மணியளவில் ஏ விவி 8842 என்ற விசேட விமானம் மூலமே இங்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பாதுகாப்புக் காரணங்களுக்கென இவர்களோடு 122 பிரித்தானிய பொலிஸாரும் இங்கு வருகை தந்தனர்.

Post Footer automatically generated by wp-posturl plugin for wordpress.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்ட தமிழ்ப் பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நபரொருவர் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து நேற்று சடலமாக மீட்கப்பட்ட தமிழ்ப் பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் நபரொருவர் பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவர் கொலையுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளார் என்ற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது.சுதர்ஷனி சகிலா கனகசபை (48) என்ற இப்பெண் கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் திகதி லண்டனிலிருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.இவர் ஏற்கனவே அங்கு திருமணமானவர் என்பதுடன் 2 குழந்தைகளின் தாய் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் கணவரிடமிருந்து விவாகரத்துப் பெற்ற பின்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இவர் இங்கு வேறொரு நபரை மறுமணம் செய்துள்ளார்.

இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு கொள்ளுப்பிட்டிப் பகுதியில் உள்ள ரேணுகா ஹோட்டலில் அறையொன்றில் தங்கியுள்ளனர்.

இவர்கள் தங்கியிருந்த அறையானது கடந்த சில நாட்களாக மூடிய நிலையில் காணப்பட்டதால் ஹோட்டல் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர்கள் அறையைத் திறந்து பார்த்த போது குறித்த பெண் கொலை செய்யப்பட்டிருந்தமையைக் கண்டுள்ளனர்.

கூரிய ஆயுதத்தால் கழுத்து வெட்டப்பட்ட நிலையிலேயே சடலம் கிடந்துள்ளது.

உடனே அவ் ஊழியர்கள் கொள்ளுப்பிட்டிய பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளனர்.

பெண்ணின் நகைகள் மற்றும் பணம் ஆகியன அறையில் பத்திரமாக இருந்ததால் கொள்ளையடிக்கும் நோக்கத்திற்காக இக்கொலை இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ___

3

Post Footer automatically generated by wp-posturl plugin for wordpress.