இலங்கை ரூபாவின் மதிப்பு 3 வீதத்தினால் குறைப்பு 113.50 ரூபாவாக உயர்ந்தது அமைரிக்க டொலர்

இலங்கை நாணயம் 3 வீதத்தினால் குறைப்பு செய்யப்படவுள்ளது என்று இலங்கை மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கைப்ரால் அறிவித்திருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வரவு செலவுத் திட்டத்தை சமர்பித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாணய மதிப்பிறக்கம் யோசனையை தெரிவித்தார்.

இதை அடுத்து இலங்கை மத்திய வங்கி ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய போதே ரூபாவின் மதிப்பு 3 வீதத்தினால் நேற்று குறைக்கப்படவுள்ளதாக உறுதிப்படுத்தினார். இதனால் 113.50 ரூபாவாக அமெரிக்க டொலர் உயர்வடைந்துள்ளது.

ஐரோப்பிய கடன் நெருக்கடியை அடுத்து பிலிப்பைன்ஸ் தொடக்கம் மலேசியா ஆகிய ஆசிய நாடுகளைப் பின்பற்றி இலங்கை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தியா தொடக்கம் தாய்லாந்த வரையான கொள்கை வகுப்பாளர்கள் தமது நாணயத்தின் பெறுமதியை குறைக்க அனுமதித்த போதும் இலங்கை ரூபாவின் மதிப்ப இந்த ஆண்டு இலங்கை ருபாவின் மதிப்பு 0.5 வீதம் அதிகரித்ததாகவும் அவர் கூறியள்ளார்

Post Footer automatically generated by wp-posturl plugin for wordpress.

குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள்; 50 லட்சம் பெறுமதியான நகைகள் அபேஸ்

யாழ்.கச்சேரியடிப் பகுதி, புன்னாலைக்கட்டுவன் பகுதிகளில் நேற்று முன்தினம் இரண்டு வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த 83 பவுண் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

 

இவற்றுடன் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், வீடியோக்கமரா என்பனவும் புன்னாலைக்கட்டுவனில் திருடப்பட்டுள்ளன.
 
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக யாழ்ப்பாணம் மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பான விசாரணை மேற்கொண்டுள்ளதாக அந்தப்பகுதி பொலிஸார் தெரிவித்தனர்.
 
புன்னாலைக்கட்டுவன் மணியகாரர் வீதியில் உள்ள வீடொன்றினுள் அதிகாலை 1.30 மணியளவில் ஓடுபிரித்து உள்நுழைந்த திருடர்கள் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி 33 லட்சம் பெறுமதியான 66 பவுண் நகையையும் 90 ஆயிரம் பெறுமதியான இரண்டு கைத்தொலைபேசிகள், வீடியோக்கமரா என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
 
இந்தக் கொள்ளைக் கும்பல் முகமூடி அணிந்துள்ள நிலையில் குறித்த வீடுகளுக்குள் புகுந்துள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். 
 
இதேவேளை, கச்சேரியடியில் நேற்று முன்தினம் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளான துரைரட்ணம் திரேசம்மா என்பவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Post Footer automatically generated by wp-posturl plugin for wordpress.

இனப்பிரச் சினைக்குத் தீர்வுகாணும் வகையில் அரசமை ப்பிலுள்ள விடயங்களை ஆராய்ந்து அறிக்கை

இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் அரசமைப்பிலுள்ள விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கக் கோரும் பிரேரணை நாடாளுமன்றில் நேற்று முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

 
இந்தப் பிரேரணை நேற்று சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வாவினால் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது. பின்னர் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.6 மாதங்களுக்குள் தீர்வை முன்வைக்கும் வகையில் இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனவும், இக்குழுவில் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் 19 பேரும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் 12 பேரும் உள்ளடங்குகின்றனர் எனவும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இங்கு வாழும் அனைத்து இனமக்களும் தத்தமது தனித்துவத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்தவும், கண்ணிய மாகவும் பாதுகாப்பாகவும் ஒரே தேச மக்களாக வாழ்வதற்கான தத்துவம் அளிப்பதை அரசமைப்பின் மூலம் உறுதிப்படு த்தவும் தேவையான விடயங்களை ஆராய்ந்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிப்பதற்கென நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கவேண்டும் எனக் கோரும் பிரேரணையே அங்கீகரிக்கப்பட்டது. 
 
இவ்வாறு தெரிவுசெய்யப்படும் தெரிவுக்குழு, நியமித்த தினத்திலிருந்து ஆறு மாதங்களுக்குள் தமது அறிக்கையைச் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பிரேரணையில் ஆளுந்தரப்பு உறுப்பினர்களான அமைச்சர்கள்  மைத்திரிபால சிறிசேன, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, பஸில் ராஜபக்ஷ, ஆறுமுகன் தொண்டமான், சம்பிக்க ரணவக்க, டக்ளஸ் தேவானந்தா, ரவூப் ஹக்கீம், அநுர பிரியதர்ஷன யாப்பா, பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, ரஜீவ விஜேசிங்க, ஏ.எச்.எம்.அஸ்வர், பி.பியசே ன ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
 
  • இந்தத் தெரிவுக்குழுவில் மக்கள் பிரதிநிதிகளான 31 பேர் இடம்பெறவேண்டும்.
  • தெரிவுக்குழுவின் தலைவரை சபாநாயகரே நியமிப்பார்.
  • இத்தெரிவுக்குழுவினர் தமது பரிந்துரை அறிக்கையை நியமிக்கப்பட்ட தினத்திலிருந்து ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்கவேண்டும்.

ஆராயப்படவேண்டிய விடயங்கள்
  • அனைத்து இனமக்களும் தமது தனித்துவத்தையும்,  பாதுகாப்பையும், மேம்படுத்தவும், கண்ணியமாகவும், பாதுகாப்பாகவும் ஒரே தேச மக்களாக வாழ்வதை உறுதிப்படுத்தல்.
  • இலங்கையில் வாழும் மக்களின் மத்தியில் ஐக்கியத்தை மேம்படுத்துதல்.
  • சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார அபிவிருத்திகளை மேம்படுத்துவதற்கு தத்துவமளித்தல்.

    தெரிவுக்குழுவுக்கான அதிகாரங்கள்
  •  அவசியம் எனக் கருதும் எவரையும் அழைத்து விசாரிக்கவும், ஆவணங்களைப் பரிசீலனை செய்யவும் 
  •  இவ்வாறு அழைக்கப்படும் நபரை சத்தியப்பிரமாணம் அல்லது உறுதிமொழியின்பேரில் விசாரணை செய்யவும் 
  • தெரிவுக்குழுவுக்கு துணைபுரியும் பொருட்டு உரிய துறையிலுள்ள நிபுணர்களினதும், வல்லுநர்களினதும் சேவைகளைப் பெற்றுக்கொள்ளவும் 
  • காலத்திற்கு காலம் இடைக்கால அறிக்கைகளைச் சமர்ப்பிக்கவும் இந்தத் தெரிவுக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்படவேண்டும் எனவும் இந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Post Footer automatically generated by wp-posturl plugin for wordpress.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

கிரான் பிரதேச செயலகப்பிரிவில் மக்கள் இடம்பெயர ஆரம்பித்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜா தெரிவித்தார்.

இடம்பெயர்ந்தவர்களில் சிலர் வாழைச்சேனை கிண்ணையடி வித்தியாலயத்தில் தங்கியுள்ளனர். தொடர்ந்தும் கடும்மழை பெய்து வருவதால் இடம் பெயர்வுகள் தொடர்ந்து அதிகரிக்குமென

Post Footer automatically generated by wp-posturl plugin for wordpress.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் நிதி திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஐந்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் நிதி திரட்டல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஐந்து இலங்கையர்களுக்கு நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

நெதர்லாந்து வாழ் தமிழ் மக்களிடம் குறித்த நபர்கள் சட்டவிரோதமான முறையில்  நிதி திரட்டியதாகவும், அந்த நிதியை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அனுப்பி வைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

குறித்த ஐந்து இலங்கைத் தமிழர்களுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச பட்சமாக ஆறு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் இளைஞர் அமைப்பு, நெதர்லாந்து தமிழ் கலை கலாச்சார அமைப்பு போன்ற பெயர்களில் புலி ஆதரவு அமைப்புக்களை உருவாக்கி பல மில்லியன் யூரோ நிதியை குறித்த நபர்கள் திரட்டியுள்ளதாக அரச தரப்பு சட்டத்தரணிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இவ்வாறு திரட்டப்பட்ட பணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Post Footer automatically generated by wp-posturl plugin for wordpress.